சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

4. மாசில் வீணையும் - பாடல் 8

அப்பர் பிரான் திருமண வாழ்க்கையில் ஈடுபடாதவர். சமண சமயத்தைச் சார்ந்து இருந்த போதும் சமண குருவாகவே அவர் வாழ்ந்து வந்தார்.

Updated On :23 அக்டோபர் 2015, 9:39 am

எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">எழுது பாவை நல்லார் = சித்திரத்தில் தீட்டப்பட்டது போன்ற அழகான பெண்கள்</p><p align="JUSTIFY">திறம் = தொடர்பு</p><p align="JUSTIFY">அப்பர் பிரான் திருமண வாழ்க்கையில் ஈடுபடாதவர். சமண சமயத்தைச் சார்ந்து இருந்த போதும் சமண குருவாகவே அவர் வாழ்ந்து வந்தார். எனவே இந்த குறிப்பு அவரது வாழ்க்கைக்கு பொருந்தாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, மாதர் பால் மனதினை செலுத்தி பொழுதினைக் கழிப்போர் இறைவனை சிந்திப்பதில்லை. இறைவனைச் சார்ந்து அடையும் இன்பமே என்றும் நிலைத்து நிற்கும் இன்பமாகும். உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை எனவே இவற்றை சிற்றின்பம் என்று கூறுவார்கள். நமது ஐம்பொறிகள் மூலம் இத்தகைய சிற்றின்பத்தை அனுபவித்த நமது உயிர், மறுபடியும் மறுபடியும் அந்த வழியில் செலுத்தப்படவேண்டும் என்று அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் நமது மனம் முயற்சி செய்கின்றது. எனவே அந்த நெஞ்சத்தை இழிந்த நெஞ்சம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், உழுத சால் வழி என்று நிலையற்ற சிற்றன்பங்களை அனுபவித்த உயிரும் உடலும் அதன் வழியே மீண்டும் மீண்டும் செல்வதை குறிப்பிடுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்?</p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.