தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சொற்றுணை வேதியன் - பாடல் 3

தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும், பயிலுதல் என்று கூறுவார்கள். கல்வி கற்பதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

Updated On :21 செப்டம்பர் 2015, 12:19 pm

     விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

     உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

     பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

     நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும், பயிலுதல் என்று கூறுவார்கள். கல்வி கற்பதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. நமது முதிய வயதிலும் நாம் ஏதாவது புதிய விஷயத்தைக் கற்றுகொள்கிறோம் என்பதால்தான், கற்றலை கல்வி பயிலுதல் என்று கூறுகிறோம். அதேபோன்று, உலகில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்துகொண்டு இருப்பதால், பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p align="JUSTIFY">நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியைப் பிடுங்க வேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக்கொண்டால்தான், அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகிறது என்பதை நண்ணி நின்று என்று இங்கே அப்பர் பிரான் கூறுகிறார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">ஆகாயம் வரை மிகவும் உயரமாகக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியலாயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்து பற்றிக்கொண்டால், அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி, ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவதுபோல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும், அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.