பாடல் 6
ஓரிடம்பு இருவராகி ஒளிநிலா எறிக்கும் சென்னிச்
பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரம மூர்த்தி
காரிடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடுமாறே
விளக்கம்
இருவர் = சக்தி, சிவம் ஆகிய இருவர். பாரிடம் = பூதகணம். பாணி செய்ய = தாளம் கொட்ட. கார் = மேகங்கள். பிறங்கு = ஒளி வீசும்
பொழிப்புரை
ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில் இருவராய் கலந்துநிற்கும் எம்பெருமான், சந்திரனின் ஒளி பரவிய சென்னியராய், அருகிலுள்ள பூதகணங்கள் தாளமிட, நடனக் கலையில் தேர்ந்தவராய், மேகங்கள் தங்கும் உயர்ந்த மாடங்களையும் சோலைகளையும் உடைய தில்லைச் சிற்றம்பலத்தில், ஒளிவீசும் தீயினிடை நடமாடுகின்றார். இவ்வாறு சிவபிரான் நடனமாடும்போது, அவர் நடமாடும் அரங்கு மேலும் விரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

