வடம் கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையராகித்
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே
விளக்கம்
தடம் கடல் = பெரும் கடல், பாற்கடல். கெழு = நெருங்கி பொருந்திய.
பொழிப்புரை
வாசுகி பாம்பினை கயிறாக நெருக்கி கட்டப்பட்ட மந்திர மலையை மத்தாக பயன்படுத்தி, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, கடலிலிருந்து கொடிய கரிய நஞ்சு எழுந்தது. அவ்வாறு எழுந்த நஞ்சினைக் கண்டு, திருமால், பிரமன் உட்பட பல தேவர்களும் மிகவும் பயந்து, சிவபெருமானை அணுகி, நீரே எங்களுக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று வேண்டியபோது, அவர்களுக்கு அருள்புரிய வேண்டி, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் காப்பாற்றியவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

