ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 10

மதில்களை உடைய இலங்கைக்கு அரசனும், வேல் ஏந்திய வீரனும் ஆகிய அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி

Updated On :27 ஜூன் 2016, 11:12 am

பாடல் 10

மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

<strong><br />விளக்கம்<br /></strong><br />மாலினாள் = பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள். வேலினான் = வேல் ஏந்திய வீரன். நூலினான் = வேத நூல்களை அருளிய பெருமான்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">மதில்களை உடைய இலங்கைக்கு அரசனும், வேல் ஏந்திய வீரனும் ஆகிய அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினை மிகுந்த கோபத்துடன் பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலையில் ஏற்பட்ட அசைவினால், பெருமானிடம் மிகுந்த விருப்பம் கொண்டவளாகிய உமை நங்கை அச்சம் கொண்டாள். இந்த நிலையைக் கண்ட, வேத நூல்களை அருளியவனாகிய சிவபெருமான், சிரித்தவாறே, ஒரு நொடிப் பொழுதில் அரக்கன் இராவணன் ஆற்றலிழந்து கீழே விழுமாறு கயிலாய மலையினைத் தனது கால் விரலினால் அழுத்தினார். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைச் தலைவராக விளங்குகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>முடிவுரை</strong></p><p align="JUSTIFY">பெருமான் என்னென்னவெல்லாம் வைத்து எப்படியெல்லாம் நமக்கு அருள்புரிந்தார் என்பதை மேற்கண்ட பதிகம் மூலம் அறிந்த நாம், இவ்வாறு அருள் புரிந்த பெருமானிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைத்து அவரை வழிபாட்டு, வாழ்வினில் முக்தி அடைவோமாக.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.