புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

27. நன்று நாள் தொறும் - பாடல் 3

வேட்களத்து உறையும் வேதியனாகிய எமது இறைவன், பசுபதியாக அனைத்து உயிர்களுடனும் கலந்து இருப்பவர்;

Updated On :6 ஜூன் 2016, 9:37 am

பாடல் 3

வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆனைஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே

<strong><br /><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஆ = பசு. ஆக்கள் ஏறுவர் = பசுக்களின் உள்ளே இருப்பவர். பசு என்பது உயிரினை குறிக்கும் பசுக்கள் என்று கூறியதால் அனைத்து உயிர்களின் உள்ளே இருந்து கொண்டு அவைகளுக்கு வழிகாட்டியாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆக்கள் என்று பன்மையில் சொல்வதால், பெருமானது வாகனமாகிய எருதினை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தம் அன்று.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">வேட்களத்து உறையும் வேதியனாகிய எமது இறைவன், பசுபதியாக அனைத்து உயிர்களுடனும் கலந்து இருப்பவர்; அவர் பசுவிடமிருந்து கிடைக்கப் பெரும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுதலை பெரிதும் விரும்புவார்; அத்தகைய இறைவனை, பூக்கள் கொண்டு அவனது திருவடிகளில் சமர்பித்து அவனை வாழ்த்தி வணங்கினால், திருநீலகண்டராக விளங்கும் அவர் நம்மை காப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை வணங்கி வழிபட்டு அருள் பெறுவீர்களாக.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.