பாடல் 5
உருளுடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும்
குறைவில்லை ஊர்தி வெள்ளேறு
இருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர் இமையவர்கள்
தொழுது ஏத்தும் இறைவனார் தாம்
பொருளுடையர் அல்லர் இலரும் அல்லர் புலித்தோல்
உடையாகப் பூதம் சூழ
அருளுடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">உருள் = சக்கரம். கோதை = மாலையின் ஒரு வகை.</p><p align="JUSTIFY">பிச்சை ஏற்று ஊர் ஊராகத் திரிந்ததால் பொருள் ஏதும் இல்லாதவர்போல தோற்றம் அளித்தாலும், உலகம் அனைத்தையும் உடையவர் என்பதால், உண்மையில் பொருள் உடையவர். எல்லாம் உடையவர் சிவபிரான் என்பதை உணர்த்தும் வகையில், நக்கீரர், தனது கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி என்ற பதிகத்தின் ஒரு பாடலில், தான் நாளும் பிச்சை ஏற்றாலும், தனது அடியார்களுக்கு வானுலகமும், மண்ணுலகமும் கொடுப்பவன் சிவபிரான் என்று கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">இருந்தவா காணீர் இது என்ன மாயம்<br />அருந்தண் கயிலாயத்து அண்ணல் வருந்திப் போய்த்<br />தான் நாளும் பிச்சை புகும் போலும் தன் அடியார்<br />வானாள மண்ணாள வைத்து</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை போன்றவற்றை குறைவறப் பெற்றிருப்பினும் தனது வாகனமாக வெண்மை நிறம் கொண்ட காளையையே, ஈசன் பயன்படுத்துகின்றார். நஞ்சம் உண்டதால் கறுத்த கண்டத்தை உடைய இவர், செந்தீயின் வண்ணத்தவர். வானோர்கள் தொழுதேத்தும் இவர், தான் பலி தேடிப் போனாலும், தனது அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன கொடுப்பதால், இவரை பொருள் உள்ளவர் என்றும் சொல்ல முடிவதில்லை, பொருள் அல்லாதவர் என்றும் சொல்ல முடிவதில்லை. புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள இவரை பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றார்கள். அடியார்களுக்கு அருளும் தன்மை படைத்த ஆமாத்தூர் தலைவர், தனது மார்பினில், கோதை எனப்படும் வகையைச் சார்ந்த மாலையினை அணிந்து மிகவும் அழகியவராக காணப்படுகின்றார்.</p><p align="JUSTIFY"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

