புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 8

இகழ்ச்சி தோன்ற ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு மனத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. அப்பர் பிரான் தனது

Updated On :21 மே 2016, 7:06 am

பாடல் 8

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறி கண் மேலே
கனைப்பரால் என் செய்கேனோ கறையணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லை சிற்றம்பலத்தே
அனைத்து நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே

</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இகழ்ச்சி தோன்ற ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு மனத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. அப்பர் பிரான் தனது மனத்தினை கட்டுப்படுத்த முடியாத தனது செயலற்ற தன்மையை குறிப்பிட்டு வேதனைப் படுகின்றார். சிவபிரான் அருள் கூடினால்தான் தனது வேதனை தீரும் என்ற எண்ணத்தினை அவரது அங்கலாய்ப்பு வெளிப்படுத்துகின்றது.</p><p align="JUSTIFY">இலயம் என்பதற்கு உலகங்கள் என்று பொருள் கொண்டு அனைத்து உலகங்களும் கூத்தபிரானின் நடனத்தில் ஒடுக்கம் என்பதை இங்கே உணர்த்துவதாகவும் கூறுவார்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">விடம் உண்டதால் கருநிறமாக மாறிய கழுத்தினை உடைய நீலகண்டனே, எனது உள்ளம் பெருமை தராத வழிகளையே நாடித் திரிகின்றது. யான் யாது செய்வேன்? தினையளவு கூட குறையாமல் வேதங்கள் பாடப்படுகின்ற தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நீ ஆடும் நடனத்தின் அழகினைக் காண்பதற்காக நான் வந்துகொண்டு இருக்கின்றேன்.</p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.