பாடல் 9
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானும் அவள் புக்கதே புகத்
தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே
ஆக யானும் அவர்க்கு இனி ஆகதே
விளக்கம்
முந்தைய பாடலில் தாய் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. எனவே இந்த பாடல் மகளின் கூற்றாக கருதப்படுகின்றது. மேக யானை என்பது எதுகை கருதி மாக யானை என்று திரிந்துள்ளது. மாக யானை = மேகத்தைப் போன்று கரிய நிறம் உடைய யானை. மருப்பு = கொம்பு. இங்கே யானையின் தந்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் மட்டுமல்ல, தனது தோழியர் பலரும் சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி கூறுகின்றாள்.
பொழிப்புரை
கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள யானையின் தந்தங்களை ஒத்த முலைகளை உடைய எனது தோழிகள் பலர், சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சென்ற நானும், அவரது அழகிய தோற்றத்தில் மயங்கி, அவர் மீது காதல் கொண்டுள்ளேன். தோகை மயில் போன்று அழகான தோணிபுரத்து இறைவரின் அழகில் மயங்கிய யான் அவருக்கு அடிமையாக மாறிவிட்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

