மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 9

கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள

Updated On :2 அக்டோபர் 2016, 6:30 pm

பாடல் 9

    மாக யானை மருப்பேர் முலையினர்
    போக யானும் அவள் புக்கதே புகத்
    தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே
    ஆக யானும் அவர்க்கு இனி ஆகதே

விளக்கம்

முந்தைய பாடலில் தாய் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. எனவே இந்த பாடல் மகளின் கூற்றாக கருதப்படுகின்றது. மேக யானை என்பது எதுகை கருதி மாக யானை என்று திரிந்துள்ளது. மாக யானை = மேகத்தைப் போன்று கரிய நிறம் உடைய யானை. மருப்பு = கொம்பு. இங்கே யானையின் தந்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் மட்டுமல்ல, தனது தோழியர் பலரும் சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி கூறுகின்றாள்.

பொழிப்புரை

கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள யானையின் தந்தங்களை ஒத்த முலைகளை உடைய எனது தோழிகள் பலர், சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சென்ற நானும், அவரது அழகிய தோற்றத்தில் மயங்கி, அவர் மீது காதல் கொண்டுள்ளேன். தோகை மயில் போன்று அழகான தோணிபுரத்து இறைவரின் அழகில் மயங்கிய யான் அவருக்கு அடிமையாக மாறிவிட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.