பாடல் 5
செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா
அங்கியின் உருவாகி அழல்வதோர்
பொங்கு அரவனைப் புள்ளிருக்குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வரும் இன்பே
விளக்கம்
பொங்கரவம் = சினம் பொங்கி படம் எடுத்தாடும் பாம்பு.
பொழிப்புரை
சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடியையும் முடியையும் அறிய முடியாதபடி, தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான். நெருப்பு நமது உடலை தீய்ப்பது போன்று, நமது உடலை கருகச் செய்யும் விடத்தினை உடையதும், சினம் பொங்கி படம் எடுத்து ஆடும் இயல்பினை உடையதும் ஆகிய பாம்பினைத் தனது உடலில் ஆபரணமாக அணிந்தவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனை வாழ்த்தினால் நமக்கு இன்பம் உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

