ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

57. பாறலைத்த படுவெண் - பாடல் 5

எங்களது தலைவராகிய பெருமான்

Updated On :6 ஏப்ரல் 2017, 12:22 pm

எம் பிரான் இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பராகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழும் அவர்க்கு
அன்பராகி நின்றார் அன்னியூரரே
 

விளக்கம்

ஈசன் = ஆள்பவன். இமையோர்கள் தமக்கெலாம் எம்பிரான் என்று சொற்களை மாற்றி அமைத்துக்கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் தலைவன் என்று பொருள் கொண்டு, இன்பராகி இருந்த ஈசன் என்பதற்கு வரம்பில்லாத இன்பம் உடையவன் என்று அவனது குணத்தினை குறிப்பதாகவும் கொள்ளலாம். வரம்பிலா இன்பம் உடைத்தல், பெருமான் எட்டு குணங்களில் ஒன்றாகும்.

பொழிப்புரை

எங்களது தலைவராகிய பெருமான், தேவர்களின் துயரங்களை நீக்கியதால் அவர்களுக்கு இன்பம் அளிப்பவராக இருக்கின்றார். எங்களை ஆள்பவராக விளங்கும் பெருமான், தங்களுக்கு துன்பங்களை அளிக்கும் கொடிய வினைகளை நீக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் தன்னைத் தொழும் அடியார்களின் வினைகளை அறுத்து அவர்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார். இவ்வாறு தேவர்களுக்கு இன்பராகவும், அடியார்களுக்கு அன்பராகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.