

பாடல் 8:
முந்தி இவ்வுலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
விளக்கம்:
இந்த பாடலில், திருமாலும் பிரமனும் மனம். மெய், மொழிகளால் இறைவனை வணங்கிய தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது. என் தனி நாதனே என்று நினைத்தது மனத்தின் செயல்; இறைஞ்சி நின்றது உடலின் செயல்; ஏத்தல் செய்தல், வாயின் செயல்.
பொழிப்புரை:
முன்னொரு நாளில், உலகத்தைப் படைத்த பிரமன், திருமாலுடன் சேர்ந்து, தங்களது நாதன் ஒப்பற்ற சிவபெருமான் தான் என்பதை நெஞ்சார நினைந்து, சிவபெருமானின் அருளை வேண்டி வணங்கி, வாயால் அவரது புகழ்களைக் கூறி வாழ்த்தி நின்றபோது, முடிவில்லாத சோதியாக அவர்கள் முன்னர் தோன்றி, அவர்களால் அடிமுடி அறியாத வண்ணம் தீப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்தார். இவ்வாறு அவர்களுக்கு அருளியவர், சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

