ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

53. கொள்ளும் காதன்மை -  பாடல் 8

வேள்வி முதலான காரியங்களில்

Updated On :22 மார்ச் 2017, 10:56 am

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயிலாடுதுறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே
 

விளக்கம்

கோல் = யோக தண்டம். புல் = தருப்பை. கூர்ச்சம் = தருப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படுவது. அந்தணர்கள் வேள்வி முதலான காரியங்களைத் தொடங்குவதற்கு முன்னர், புல்லினையும் கூர்ச்சத்தையும் கையில் இடுக்கிக்கொண்டு சங்கல்பம் செய்துகொள்வார்கள். தோல் = மான் தோல். நூல் = அறிவு தரும் நூல்கள் என்றும் பூணூல் என்று இரண்டு பொருள்களும் பொருந்தும். வேதங்கள் சொல்லும் பொருளின் உண்மையை, சிவபெருமானின் தன்மையை உணர்ந்தவர்களுக்கு, சாதனங்கள் ஏதும் தேவைப்படாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

மூன்று கிளைகளை உடைத்த யோக தண்டத்தினையும், தர்ப்பை புல்லினையும், தர்ப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படும் கூர்ச்சத்தையும் கையில் கொண்டவாறு, தோலினால் ஆன ஆடையையும் அணிந்த பின்னரும், தாங்கள் செய்ய வேண்டிய வேள்வி முதலான காரியங்களில் மனம் பதியாமல் துயரம் அடைந்தால், என்ன பயனும் ஏற்படாது. நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.