கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயிலாடுதுறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே
விளக்கம்
கோல் = யோக தண்டம். புல் = தருப்பை. கூர்ச்சம் = தருப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படுவது. அந்தணர்கள் வேள்வி முதலான காரியங்களைத் தொடங்குவதற்கு முன்னர், புல்லினையும் கூர்ச்சத்தையும் கையில் இடுக்கிக்கொண்டு சங்கல்பம் செய்துகொள்வார்கள். தோல் = மான் தோல். நூல் = அறிவு தரும் நூல்கள் என்றும் பூணூல் என்று இரண்டு பொருள்களும் பொருந்தும். வேதங்கள் சொல்லும் பொருளின் உண்மையை, சிவபெருமானின் தன்மையை உணர்ந்தவர்களுக்கு, சாதனங்கள் ஏதும் தேவைப்படாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை
மூன்று கிளைகளை உடைத்த யோக தண்டத்தினையும், தர்ப்பை புல்லினையும், தர்ப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படும் கூர்ச்சத்தையும் கையில் கொண்டவாறு, தோலினால் ஆன ஆடையையும் அணிந்த பின்னரும், தாங்கள் செய்ய வேண்டிய வேள்வி முதலான காரியங்களில் மனம் பதியாமல் துயரம் அடைந்தால், என்ன பயனும் ஏற்படாது. நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

