ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழியாவது நின்மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே
விளக்கம்
ஊன் நோக்கும் இன்பங்கள் = உடலில் உள்ள ஐம்பொறிகள் பெரும் இன்பங்கள். வான் நோக்கும் வழி = பேரின்பம் தரும் முக்தி வீட்டினை அருளும் வழி. உழலுதல் = வருத்துதல். நின்மின் = நில்லுங்கள். தேன் = அடியார்க்கு தேனாக இனிக்கும் பெருமான். பதிகத்தின் முதல் பாடலில், பண்ணுடன் இசைந்த பாடல்கள் பாடி வழிபடும் அடியார்களுக்கு கண்ணின் மணியாக இருப்பவன் பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், எப்போதும் தன்னை நோக்கும் அடியார்களுக்கு இந்த பாடலில் நாவிற்கு இனிய தேன் போன்று இருப்பான் என்று கூறுகின்றார். திருவைந்தெழுத்தை ஓதுதலும், இறைவனை தியானம் செய்து நிட்டையில் இருத்தலும், பரமனையே நோக்கி இருக்கும் செயல்களாக கருதப்படுகின்றன.
பொழிப்புரை
அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சமே, உடலின் ஐம்பொறிகள் விரும்பும் நிலையற்ற சிற்றின்பங்களைத் தேடி அலையாது, நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றினை அடையும் வழியைத் தேடிச் சென்று அந்த வழியில் நிற்பாயாக. தன்னை நோக்கி வழிபடும் அடியார்களின் நாவிலும் உள்ளத்திலும் தேன் போன்று இனிக்கும் தன்மையான், சிவபெருமான் உறையும் திருவெண்காடு அடைந்து அவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

