ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 2

அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை

Updated On :25 மார்ச் 2017, 11:14 am

துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார்சடை மேல் பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே
 

விளக்கம்

துன்னு = அடர்ந்த, நெருங்கிய. உன்னுதல் = நினைத்தல். மன்னு = நிலைபெற்று இருத்தல். மன்னுவார் = நிலையாக இருத்தல்.

பொழிப்புரை

அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் கூடியவரும், ஒன்றோடொன்று பின்னி காணப்படும் நீண்ட சடையின் மேல் பிறையை வைத்தவரும், நிலைபெற்ற புகழினை உடைய தலமாகிய மணஞ்சேரி தலத்தில் உறைபவரும், நமது பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவரும் ஆகிய பெருமானை நினைப்பவர்களின் வினைகள் அனைத்தும் ஒழியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.