சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேர் அமண் கையர் புகழவே
மத்தர் தாம் அறியார் மணஞ்சேரி எம்
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே
விளக்கம்
சேர் = புத்த மதத்தினோடு சேர்ந்த. புத்தர் சேர் அமண் கையர் என்பதை, மத்தர் தாம் அறியார் என்ற தொடருடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். மத்தர் = உன்மத்தர் என்ற சொல்லின் சுருக்கம்.
பொழிப்புரை
சித்தர்கள், தேவர்கள், திருமால், பிரமன் ஆகியோர் ஒரு புறம் பெருமானைப் புகழ, நிலையில்லாத உலகப் பொருட்களை நிலையாக கருதி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தர்களும் சமணர்களும் பெருமானை அறியாமல் இருகின்றார்கள். அவ்வாறு உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழாது, பெருமானின் பெருமைகளை புரிந்துகொண்டு அவரைத் தொழுது வாழும் அடியார்களுக்கு அல்லல் இல்லாத வண்ணம் செய்பவர், மணஞ்சேரியில் உறையும் பெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

