மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 2

தேனை உண்ணச் செல்லும்

Updated On :14 ஜூன் 2017, 11:04 am

காவிரியின் வடகரைக் காண்தரு
மா விரியும் பொழில் மங்கலக்குடித்
தே அரியும் பிரமனும் தேடொணாத்
தூ எரிச் சுடர் சோதியுள் சோதியே
 

விளக்கம்

காண் தரு = காணத் தக்க. மா = வண்டு. விரியும் = படந்து விரியச் செய்யும். தே = தெய்வத் தன்மை பொருந்தியவன். 

பொழிப்புரை

காவிரியின் வடகரையில் கண்டுகளிக்கத்தக்கதும், தேனை உண்ணச் செல்லும் வண்டுகள் அமர்வதால் படர்ந்த விரிந்த மலர்களை உடையதும் ஆகிய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில் உறையும் பரமன் தெய்வத் தன்மை பொருந்தியவன். அவன் திருமாலும் பிரமனும், தனது அடியையும் முடியையும் தேடிக் காணாத வகையில், நெடிய, தூய்மையான அழலாக நீண்டவன். அவன் தான் ஆன்மா எனப்படும் சோதிக்குள்ளே சோதியாக நின்று, நம்மை இயக்கும் இறைவன் ஆவான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.