காவிரியின் வடகரைக் காண்தரு
மா விரியும் பொழில் மங்கலக்குடித்
தே அரியும் பிரமனும் தேடொணாத்
தூ எரிச் சுடர் சோதியுள் சோதியே
விளக்கம்
காண் தரு = காணத் தக்க. மா = வண்டு. விரியும் = படந்து விரியச் செய்யும். தே = தெய்வத் தன்மை பொருந்தியவன்.
பொழிப்புரை
காவிரியின் வடகரையில் கண்டுகளிக்கத்தக்கதும், தேனை உண்ணச் செல்லும் வண்டுகள் அமர்வதால் படர்ந்த விரிந்த மலர்களை உடையதும் ஆகிய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில் உறையும் பரமன் தெய்வத் தன்மை பொருந்தியவன். அவன் திருமாலும் பிரமனும், தனது அடியையும் முடியையும் தேடிக் காணாத வகையில், நெடிய, தூய்மையான அழலாக நீண்டவன். அவன் தான் ஆன்மா எனப்படும் சோதிக்குள்ளே சோதியாக நின்று, நம்மை இயக்கும் இறைவன் ஆவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

