மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

80. ஒன்று கொலாம் - பாடல் 9

பூதப் படையினர்

Updated On :29 நவம்பர் 2017, 6:30 pm

பாடல் 9:

    ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன 
    ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
    ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
    ஒன்பது போல் அவர் பாரிடம் தானே


விளக்கம்:


பாரிடம் என்பதற்கு அகன்ற பூமி என்று பொருள் கொண்டு, அவர் படைத்த பூமியின் கண்டங்கள் ஒன்பது என்றும் விளக்கம் கூறுவார்கள். நவகண்ட பூமிப் பரப்பு என்று தாயுமானவர் ஒரு பாடலில் குறிக்கின்றார்.  

பொழிப்புரை:

சிவபெருமான் நமது உடலுக்கு வைத்துள்ள வாசல்கள் ஒன்பது, அவை இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், கருவாய், எருவாய் ஆகியவை. அவர் தமது திருமார்பில் அணிந்துள்ள பூணூலின் இழைகள் ஒன்பது. (முப்புரி நூல் எனப்படும்). அவரது அழகிய சடைகளின் எண்ணிக்கை ஒன்பது. அவரிடம் பணி செய்யும் பூதப் படையினர் ஒன்பது வகையினர் ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.