பாடல் 9:
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே
விளக்கம்:
பாரிடம் என்பதற்கு அகன்ற பூமி என்று பொருள் கொண்டு, அவர் படைத்த பூமியின் கண்டங்கள் ஒன்பது என்றும் விளக்கம் கூறுவார்கள். நவகண்ட பூமிப் பரப்பு என்று தாயுமானவர் ஒரு பாடலில் குறிக்கின்றார்.
பொழிப்புரை:
சிவபெருமான் நமது உடலுக்கு வைத்துள்ள வாசல்கள் ஒன்பது, அவை இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், கருவாய், எருவாய் ஆகியவை. அவர் தமது திருமார்பில் அணிந்துள்ள பூணூலின் இழைகள் ஒன்பது. (முப்புரி நூல் எனப்படும்). அவரது அழகிய சடைகளின் எண்ணிக்கை ஒன்பது. அவரிடம் பணி செய்யும் பூதப் படையினர் ஒன்பது வகையினர் ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

