ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

93. மடையில் வாளைபாய - பாடல் 10

கோலக்காவில் உறையும்

News image
Updated On :2 மே 2018, 4:23 am

பாடல் 10:

    
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
    உற்ற துவர் தோய் உருவிலாரும்
    குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
    பற்றி பரவப் பறையும் பாவமே

விளக்கம்:

பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்; 
 
பொழிப்புரை:

நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குறைகள் உடைய சமய நெறிகளை மேற்கொண்டு உள்ளதால், அவர்கள் கோலக்காவில் உறையும் இறைவனை, தங்களது தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை பார்த்து தவறான வழியில் செல்லாமல்; நீங்கள் கோலக்கா இறைவனைப் பற்றிக்கொண்டு போற்றி வழிபட, உங்களது பாவங்கள் தீர்ந்துவிடும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.