பாடல் 6:
உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்த
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கை கூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அரவம் ஆகும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
அரவம்=ஓசை; உரவு நீர்=பரந்த கங்கை நதி; அரவம் என்பதற்கு பாம்பு என்று பொருள் கொண்டு தண்ணீர் பாம்புகள் நிறைந்த நிவா நதி என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
பரந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்து வைத்த ஒப்பற்ற திறமை உடையவன் என்று உள்ளம் குளிர்ந்து பெருமானை வணங்கி வாழ்த்தாத மனிதர்களை பெருமானின் திருவருள் சென்று அடையாது. நெடிது உயர்ந்த குரா மரங்கள் நிறைந்த சோலைகளில் ஒடும் குளிர்ந்த நீரினை உடைய நிவா நதிக் கரையின் மீது அமைந்துள்ள சந்தடி மிகுந்து ஓசை எழும் நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், நீங்கள் பெருமானின் வல்லமைகளை புரிந்து கொண்டு அவரை வணங்கி போற்றி நைவடையும் உள்ளம் கொண்டு அவரை வழிபடுவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


