மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

117. காடது அணிகலம் - பாடல் 10

புலித்தோல் உடுப்பர்

News image
Updated On :28 டிசம்பர் 2018, 6:30 pm

பாடல் 10:

    அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்
    கொடியணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோலுடுப்பர்
    பிடியணியும் நடையாள் வெற்பு இருப்பதோர் கூறுடையர் 
    கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டரே

விளக்கம்:

அடியிணை கண்டிலன் மால், முடி கண்டிலன் தாமரையோன், கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர், புலித்தோல் உடுப்பர், பிடியணியும் நடையாள் ஓர் கூறுடையார், வெற்பு இருப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பிடி=பெண் யானை; வெற்பு=மலை, இங்கே இமயமலை; கடி=நறுமணம்; 

பொழிப்புரை: 

பெருமானது இணையான திருவடிகளை திருமால் காணமுடியவில்லை; தாமரை மலரினை தனது ஆசனமாக உடைய பிரமனாலும் பெருமானின் திருமுடியை காண முடியவில்லை; தனது கொடியில் அடையாளமாக உள்ள எருதினைத் தனது வாகனமாக உகந்து ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; தன்னை எதிர்த்து வந்த புலியினை அடக்கி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவர் சிவபெருமான்; பெண் யானை போன்று அழகிய நடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் வாழ்வது இமயமலையினில்; இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், மணம் வாய்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழியில் நீலகண்டராக உறைகின்றார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.