மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

101. நின்று மலர் தூவி  - பாடல் 8

இறைவனைத் தொழுவதால்

News image
Updated On :11 ஜனவரி 2019, 6:01 am

பாடல் 8:

    பத்துத் தலையோனை
    கத்த விரல் ஊன்றும்
    அத்தன் முதுகுன்றை
    மொய்த்து பணிமினே

 
விளக்கம்:

மொய்த்து=நெருங்கி; இந்த பாடல் நமக்கு கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது, மேலே குறிப்பிடப்பட்ட ஏழு பாடல்களில், இறைவனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பல பலன்களை கூறிய சம்பந்தர், இந்நாள் வரை இறைவனை பணியாது இருக்கும் மாந்தர்களை, இறைவனை நெருங்கிச் சென்று பணியுமாறு அறிவுரை கூறுகின்றார்.  

பொழிப்புரை:

பத்து தலைகள் உடைய அரக்கனாகிய இராவணனை, அவன் கதறி அழும் வண்ணம் கயிலை மலையின் கீழே அடர்த்து தனது கால் விரலை ஊன்றிய நமது தலைவனாகிய இறைவனை, முதுகுன்றத்து மறையவனை, உலகத்தவரே நீங்கள் நெருங்கிச் சென்று பணிவீர்களாக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.