மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

101. நின்று மலர் தூவி  - பாடல் 9

பிரமன் மற்றும் திருமால்

News image
Updated On :11 ஜனவரி 2019, 6:01 am

பாடல் 9:

    இருவர் அறியாத
    ஒருவன் முதுகுன்றை
    உருகி நினைவார்கள்
    பெருகி நிகழ்வோரே

விளக்கம்:

இருவர்=திருமால் மற்று பிரமன். இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய அன்பு நமது உள்ளத்தினை உருக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:


பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நின்ற ஒப்பற்ற முதுகுன்றத்து இறைவனை, தங்களது மனம் உருக நினைக்கும் அடியார்கள் பலவகையான பேறுகள் பெற்று வாழ்வார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.