பாடல் 6:
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே
விளக்கம்:
அயம்=ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற சம்பந்தர் கூறுகின்றார்.
பொழிப்புரை:
வாய் பிளந்த நிலையில் சிரிப்பது போல் தோன்றும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம், பல விதமான பாடல்களை பாடியவாறு, மகளிர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்லும் இறைவன், புலித்தோலை தனது தோள்கள் மீது அணிந்துள்ளான். அவன் தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் பொருத்தி உறைகின்றான். இவ்வாறு இந்த தலத்தில் நிலையாக அனைவரும் காணும் வண்ணம் உறையும் பெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை வினைகள் பின்பற்றி செல்லாது விலகி நிற்கும்.
Audio
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


