பாடல் 9:
மறையான் நெடுமால் காண்பரியான் மழு ஏந்தி
நிறையா மதி சூடி திகழ் முத்தின் தொத்தே
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும் வினையே
விளக்கம்:
நிறையா மதி=கலைகள் குறைந்த பிறைச் சந்திரன் தொத்து=குவியல்; திருமேனி முழுவதும் திருநீறு பூசப்பட்டதால் வெண் முத்தின் தொகுப்பாக இருக்கும் திருமேனியை உடைய இறைவன், நெல்வாயில் அரத்துறை தலத்தில் சம்பந்தர்க்கு முத்துச் சிவிகை அளிக்க இருக்கும் நிகழ்ச்சி அடுத்து வரப் போவதை முன்னமே உணர்த்தும் குறிப்பு.
பொழிப்புரை:
வேதங்கள் ஓதும் மறையவனாகிய பிரமனும், ஓங்கி உலகளந்த நெடிய உருவினைக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாக திகழ்ந்தவனும், மழுப் படையை ஏந்தியவனும், இளம் பிறைச் சந்திரனை சடையில் அணிந்து கொண்டு சந்திரன் தேய்ந்து அழியாமல் காத்து அருள் புரிந்தவனே, முத்தின் குவியல் போன்ற திருமேனியை உடையவனே, என்று பலவாறு போற்றி, எருக்கத்தம்புலியூர் உறைகின்ற கறைமிடற்று அண்ணலை நினைக்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் கெட்டுவிடும்.
Audio
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


