பாடல் 10:
மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே
வீசடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில் வாய்த்
தேசடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
வீசடைந்த=வீசுதலும் ஆடுதலும், நீராடும் பழக்கம் இல்லாத சமணர்களை மாசு அடைந்த மேனியர் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மனம் திரியாத=வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை ஏற்றுக் கொண்ட தன்மை; தேசு=தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.
பொழிப்புரை:
நீராடும் பழக்கம் இல்லாததால் மாசு படிந்த மேனியை உடைய சமணர்களும், வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை விருப்பத்துடன் உணவாக ஏற்றுக் கொள்ளும் புத்தர்களும் பெருமானிடம் அன்பு கொள்ளாமல் இருப்பதன் காரணம் யாது. அவர்களது தீய வினைகளே அவர்களை நல்வழியில் செல்லாமல் தடுக்கின்றது. தங்களது தோகைகளை வீசி ஆடுகின்ற மயில்கள் நிறைந்ததும் நறுமணம் கொண்ட பூக்கள் கமழ்வதும், ஒளி வீசும் வண்டுகள் பாடுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பெருமான் அமர்ந்து உறைகின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


