பாடல் 3:
நாறு கூவிள நாகு இள வெண்மதி அத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண் கதலிப் புதல் மேவு சாய்க்காடே
விளக்கம்:
நாறு=நறுமணம்; கூவிளம்=வில்வம்; தேன்கனி=முற்றின தேங்காய்; தாறு=குலை; புதல்=புதர்; ஊறு=சுவை ஊறுகின்ற; மணற்பாங்கான கடற்கரை தலத்தில் தென்னந்தோப்புகள் இருப்பது இயற்கை அல்லவா.
பொழிப்புரை:
நறுமணம் கமழும் வில்வம், இளைய பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையினில் சூட்டிக் கொள்பவனும் தேவர்களின் தலைவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தினில் உள்ளது. சுவை ஊறுகின்ற தேங்காய், மாங்கனி இவற்றை கொண்டுள்ள மரங்கள் உயர்ந்து ஓங்கி இருப்பதும் குளிர்ந்த வாழைப் பழத் தாறுகளை உடைய வாழைப் புதர்களும் பொருந்திய தலம் சாய்க்காடு தலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


