சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 3

நறுமணம் கமழும் வில்வம்

News image
Updated On :9 டிசம்பர் 2019, 6:30 pm

பாடல் 3:

    நாறு கூவிள நாகு இள வெண்மதி அத்தோடு
    ஆறு சூடும் அமரர் பிரான் உறை கோயில்
    ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
    தாறு தண் கதலிப் புதல் மேவு சாய்க்காடே
 

விளக்கம்:

நாறு=நறுமணம்; கூவிளம்=வில்வம்; தேன்கனி=முற்றின தேங்காய்; தாறு=குலை; புதல்=புதர்; ஊறு=சுவை ஊறுகின்ற; மணற்பாங்கான கடற்கரை தலத்தில் தென்னந்தோப்புகள் இருப்பது இயற்கை அல்லவா.

பொழிப்புரை:

நறுமணம் கமழும் வில்வம், இளைய பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையினில் சூட்டிக் கொள்பவனும் தேவர்களின் தலைவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தினில் உள்ளது. சுவை ஊறுகின்ற தேங்காய், மாங்கனி இவற்றை கொண்டுள்ள மரங்கள் உயர்ந்து ஓங்கி இருப்பதும் குளிர்ந்த வாழைப் பழத் தாறுகளை உடைய வாழைப் புதர்களும் பொருந்திய தலம் சாய்க்காடு தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.