பாடல் 8:
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே
விளக்கம்:
இருக்கும்=வீற்றிருக்கும்; நீள்வரை=நீண்ட கயிலை மலை; ஆகம்=உடல்; மருநறுமணம்; குலாவிய=நிறைந்த; தரு=மரங்கள்;
பொழிப்புரை:
தான் வீற்றிருக்கும் நீண்ட உயர்ந்த கயிலாய மலையினை இருபது கைகளாலும் பற்றி எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடலை, கயிலாய மலையின் கீழே அகப்பட்டு நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை அழுத்திய பெருமான், பின்னர் அரக்கன் சாமகானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கனது நிலைக்கு இரங்கி அவனுக்கு பல வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமான், உறையும் திருக்கோயில் சாய்க்காடு ஆகும். நறுமணம் பொருந்திய மல்லிகை சண்பகம் போன்ற வளமான பூக்களைக் கொண்ட மரங்கள் நிறைந்ததும் குளிர்ந்து விளங்குவதும் ஆகிய சோலைகள் நிறைந்த இடம் சாய்க்காடு ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


