தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 9

பெருமான் உறையும் இடம்

News image
Updated On :15 டிசம்பர் 2019, 6:30 pm

பாடல் 9:

    மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
    வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில்
    சேலின் நேர் விழியார் மயில் ஆலச் செருந்தி
    காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே

விளக்கம்:

நேர்=ஒத்த; வாய்ந்த=பொருந்திய; செருந்தி=உப்பங்கழிகளிலும் கடற்கரையிலும் பூக்கும், மஞ்சள் நிறத்தில் காணப்படுவது; மலர்கள்; வேலை=கடல்;

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காண்பதற்கு இயலாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், அலைகள் பொருந்திய கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவனும் ஆகிய பெருமான் உறையும் இடம், சேல் மீன்களைப் போன்று கண்கள் உடைய மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் நடமாடும் சோலைகள் கொண்டதும், பொன் போன்ற தோற்றத்துடன் காலையில் மலரும் செருந்தி பூக்கள் உடைய மரங்கள் நிறைந்ததும் ஆகிய சாய்க்காடு தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.