/

134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 3

பெருமானை தியானித்து

News image
Updated On :7 ஜூலை 2019, 6:30 pm

பாடல் 3:

    பங்கயம் கண் மலரும் பழனத்துச்
    செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
    கங்கை தங்கு சடையர் அவர் போலும்
    எங்கள் உச்சி உறையும் இறையாரே

விளக்கம்:

உச்சி=துவாத சாந்தத் தாமரை; பழனம்=வயல்கள்; பங்கயம்=தாமரை; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை வணங்க வேண்டிய அவசியத்தையும் அவரது உயர்வினையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த இரண்டு நிலைகளையும் கருதி, பெருமானை தியானித்து தனது துவாதசாந்தப் பெருவெளியில் அவரை நிறுத்தியதாக கூறுகின்றார்.   

பொழிப்புரை:

திருப்புன்கூர் வயல்களில் தாமரை மலர்கள் மலர்கின்றன; செழுமையான கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இத்தகைய நீர் வளம் நிறைந்த வயல்கள் மலிந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் இறைவர் கங்கையைத் தனது சடையினில் ஏற்றவர் ஆவார். எங்களது தலைவராகிய அவர் எங்களது தலையுச்சியின் மேல் துவாதசாந்தப் பெருவெளியிலும் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.