பாடல் 4:
கரை உலாவு கதிர் மாமணி முத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலரச் செவடியாரே
விளக்கம்:
இந்த பாடலில் பெருமானின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டு அதனைப் பற்றிக்கொண்டு உய்வினை அடையுமாறு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருவருளின் வடிவமாக திருவடி கருதப் படுகின்றது. உரை=புகழ்; சென்ற பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்தியவர், இந்த பாடலில் தலத்தின் செல்வ வளத்தினை உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
வயலின் கரைகளில் ஒளிவீசும் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்க, வயலின் நீரினில் முத்துக்கள் உலாவும் செல்வச் செழிப்பு வாய்ந்த வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில், மிகுந்த புகழினை உடைய பெருமான் உறைகின்றார். நறுமணம் மிகுந்த மலர் ;போன்ற சிவந்த பெருமானின் திருவடிகளை கண்டு தொழுது வணங்குவீராக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


