சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

144. அடையார்தம் புரங்கள் - பாடல் 5

செம்மை நிறத்துடன்

News image
Updated On :8 நவம்பர் 2019, 6:30 pm

பாடல் 5:

    மை சேர் கண்டர் அண்ட வாணர் வானவரும் துதிப்ப
    மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
    கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
    பை சேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சரமே

விளக்கம்:

மை சேர்=கருமை நிறம் பொருந்திய; மை சேர் என்று கூறுவதன் மூலம், பெருமானின் கழுத்தும் உடல் போன்று செம்மை நிறத்துடன் பண்டைய நாளில் விளங்கியது என்றும், பின்னாளில் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்தது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மேவி=விருப்பம் கொண்டு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு என்று கூறுவார்கள். அண்ட வாணர்=பல விதமான அண்டத்தில் வாழ்வோர்கள்; பொடி=திருநீறு; பை சேர்=பை போன்று; பை=பாம்பின் படம்; விழைவு=பற்று, அன்பு;   
  
பொழிப்புரை:

ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்த கழுத்தினை உடைய பெருமானை, பல அண்டங்களில் வாழ்வோரும் வானவர்களும் துதித்து போற்றுகின்றனர். இவ்வாறு அனைவராலும் போற்றப்படும் பெருமான், தனது உடல் முழுதும் திருநீறு பூசியவனாக , அடியார்கள் அவனது தன்மையை புகழ்ந்து பாட, விரும்பி அமர்ந்துள்ள இடம் பல்லவனீச்சரம் தலமாகும். தங்களது கைகளில் மிகவும் அதிகமாக வளையல் கொண்டவர்களும் பாம்பின் படம் போன்று புடைத்து காணப்படும் மார்பினை உடையவர்களும் உடைய இளமகளிர், பெருமான் பால் கொண்டுள்ள பற்று மற்றும் அளவு கடந்த காதலால், அவனது திருவடிகளை வழிபட ஒன்று சேர்கின்ற காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமே இறைவன் உறையும் தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.