சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 10

சமணர்களும் சாக்கியர்களும்

News image
Updated On :16 அக்டோபர் 2019, 11:46 am

பாடல் 10:

    அலையாரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர்
    தொலையாது அங்கு அலர் தூற்றத் தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
    தலையான நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை
    நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே

விளக்கம்:

புனல்=நீர்நிலைகள்; பண்டைய நாளில் நீர்நிலைகளில் சென்று குளிப்பது வழக்கமாக இருந்தது போலும். தொலையாது=இடைவிடாது

பொழிப்புரை:

அலை வீசும் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்து அழுக்கு சேர்ந்த உடலும் பருத்த உடலும் கொண்டவர்களாக விளங்கிய சமணர்களும் சாக்கியர்களும் இடைவிடாது பழிச்சொற்கள் சொன்ன போதிலும் அதனை பொருட்படுத்தாது உமது அடியார்களுக்கு காட்சி தந்து ஆட்கொள்ளும் இறைவனே, நூல்களில் சிறந்ததாக கருதப்படும் வேதங்களை ஓதி உணர்ந்து தமது மனதினில் தரித்துள்ள அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் நிலையாக பொருந்தி உள்ள கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு நீர் எழுந்தருளி உள்ளீர்.
   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.