சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

143. கொடியுடை மும்மதில் - பாடல் 3

சிவபெருமானின் மீது கோபம்

News image
Updated On :26 அக்டோபர் 2019, 6:30 pm


பாடல் 3:

    நொய்யதோர் மான்மறி கை விரலின் நுனை மேல் நிலையாக்கி
    மெய் எரி மேனி வெண்ணீறு பூசி விரிபுன்சடை தாழ
    மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
    வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன்னகரே

விளக்கம்:

நொய்யது=இலேசான உடலினை உடைய; மான்மறி=மான் கன்று; சிவபெருமானின் மீது கோபம் கொண்ட தாருகவனத்து முனிவர்கள், எதிரிகளை அழிக்க செய்யப்படும் அபிசார வேள்வி ஒன்றினை செய்து அந்த வேள்வியிலிருந்து மான் ஒன்றினை தோற்றுவித்து, அந்த மானுக்கு கொலைவெறி ஊட்டி சிவபெருமான் மீது ஏவினார்கள். ஆனால் சிவபெருமான், அந்த மானின் கொலைவெறியை தணித்து, இயல்பான விளையாட்டு குணம் கொண்டு துள்ளித் திரியும் மான்கன்றாக மாற்றி, தனது இடது கை விரல்களின் நுனியில் வைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. இருள் சூழ்ந்த சோலைகள் என்று இங்கே கூறப்படுகின்றது. வளமாக வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று இடைவெளி ஏதுமின்றி பின்னிப் பிணைந்து இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகுவதை தடுக்கின்றன. எனவே சோலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வைகல்=நாள்தோறும்;     

பொழிப்புரை:

மெலிந்த உடலினை உடைய மான்கன்றினை, தாருகவனத்து முனிவர்களால் கொலைவெறி ஊட்டி ஏவிவிடப்பட்ட மான்கன்றினை, அதன் பழைய இயல்பினுக்கு மாற்றி, துள்ளி விளையாடும் மான்கன்றாக மாற்றி தனது இடது கை விரல் நுனியினில் நிலையாக நிற்கும் வண்ணம் ஏந்தி இருப்பவர் சிவபெருமான். அவர், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் உள்ள தனது திருமேனியில் வெண்ணீறு பூசியவராகவும், செம்பட்டை  நிறத்தில் உள்ள சடை விரிந்து தாழும் தன்மையுடன் விளங்குகின்றார். இந்த பெருமான்,   சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகா வண்ணம் செழிப்புடன் நெருக்கமாக வளர்ந்ததால் இருள் சூழ்ந்தும் நறுமணத்துடனும் காணப்படும் சோலைகளை உடையதும்,  நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் திருவிழா போன்று முழவதிர நடைபெறும் தலமும் ஆகிய வலம்புரம் நன்னகரினில் உறைகின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.