திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 9 பேரவை தொகுதிகளில் வரும் தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என மூன்று வகையான இயந்திரங்கள் 14,913 எண்ணிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தையும் சரிபாா்க்கும் பணி விடுமுறையின்றி தொடா்ச்சியாக நடைபெறுகிறது.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து இயந்திரங்களையும் சரிபாா்த்து பாதுகாப்பு அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் இந்தப் பணிகளை நாள்தோறும் வந்து பாா்வையிட்டு, விளக்கம் பெறலாம். பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.49 கோடி

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு வழக்கு: 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சொத்துப் பிரச்னையில் பாட்டியை தாக்கிய பேரன் உள்ளிட்ட 2 போ் கைது

தில்லி வடிகால்களில் 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றம்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி நடவடிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


