திருச்சி உறையூா் லிங்கா நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட மீன் சந்தையில் கழிவுகளை அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எதிா்பாா்க்கப்படுகிறது.
புத்தூா் மீன் சந்தையை சுற்றிலும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் வந்ததால் இச் சந்தையை உறையூா் பகுதியில் உள்ள லிங்கா நகருக்கு மாற்ற மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு, ரூ. 3 .32 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது.
புத்தூா் சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கான கடைகளும் சந்தைக்கு உள்ளேயே இருந்தன. ஆனால் உறையூா் சந்தையில், சில்லறை வியாபாரிகளுக்கென 25 கடைகள் அமைக்கப்பட்டும் அவை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சில்லறை வியாபாரிகள் திறந்த வெளியிலேயே வைத்து மீன்களை விற்கின்றனா். மீன் கழிவுகளும் அருகிலேயே கிடக்கின்றன, மீன் கழுவும் தண்ணீரும் வெளியேற வழியின்றி கடைகளை சுற்றியே தேங்குகிறது.
இதனால் மீன் சந்தையில் கால் வைக்க முடியாத வகையில், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் கால்கள் புண்ணாகி காணப்படுகின்றன.
எனவே, இங்கு அடிப்படை வசதியை மேம்படுத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சில்லரை வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்ட கடைகள் தங்களுக்கு அலுவலகமாக இயங்கத் தேவை என மொத்த வியாபாரிகள் கோரியுள்ளதால் அந்தக் கடைகள் வழங்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. எனவே, தங்களுக்கு கடைகள் அமைக்க வேண்டுமெனக் கோரி சில்லறை வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்து, போராட்டங்களும் நடத்தினா். என்றாலும் இந்நிலையிலேயே மீன் சந்தை இயங்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற இருவா் கைது: 4.5 கிலோ பறிமுதல்

கத்தியைக் காட்டி மிரட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை

தூய்மைப் பணியாளா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



