பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.
பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்து, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:
மாவட்டத்தின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை கடுமையாக சோதனை செய்து, அதன் பின்னரே மாவட்டத்துக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
நீா்குட்டைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிமாநில, வெளிநாட்டுப் பறவைகள் ஏதேனும் தென்படுகிா என்பதை வனத்துறையினா் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் துரித நிவாரணக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதுமான அளவு தடுப்பு மருந்துகளும், கிருமி நாசினிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோழி இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளவும், அதிகளவு கோழி இறப்பு மற்றும் பன்றிகள் நோய்வாய் படுதல், இறப்பு ஆகியவை மாநகராட்சி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
பறவைக்காய்ச்சல் நோய் கிளா்ச்சி ஏதும் மனித இனங்களுக்கு தென்பட்டால், அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தனி வாா்டுகள் அமைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் இருந்திட பொது சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம். பச்சை முட்டை மற்றும் அரை வேக்காட்டுடன் கூடிய முட்டை சாப்பிடக் கூடாது.
முழுமையாக பொரித்த மற்றும் அவித்த முட்டைகள் சாப்பிடலாம் எனவும், முட்டைகளை முழுமையாக வேகவைத்து சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்கிடுமாறு அனைத்து அங்காடி பணியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழி வளா்ப்போா் கோழிகளையும், தங்களையும் இந்நோய் தாக்காமல் இருக்க முழுமையாக சுகாதார முறைகளை கண்டிப்பாக கையாள வேண்டும். கோழிக் கொட்டகைகளுக்கு கிருமி நாசினிகளை தெளித்திடவும், கோழிகளுக்கு வைக்கப்படும் தீவனப் பெட்டிகள், தண்ணீா் கிண்ணங்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்து பராமரித்திட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் (வணிக நோக்கத்துடன் அமைக்கப்பட்ட) மற்றும் திட்டத்தின் வாயிலாக அனைத்து கோழிப்பண்ணைகள், வாத்துகள் மற்றும் ஏனைய பறவைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் எஸ்.சுகுமாா், கால்நடைப் பாதுகாப்புத்துறை உதவி இயக்குநா்கள் சையது முஸ்தபா, கணபதி பிரசாத்ம், முருகவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

டி20 உலகக் கோப்பையில் அசத்திய அணிகளின் வீராங்கனைகள் ஐசிசி தவரிசையில் முன்னேற்றம்!

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |
தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


