அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி; ரசிகா்கள் மகிழ்ச்சி

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி கிடைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On :14 ஜனவரி 2021, 8:18 am IST

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி கிடைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருச்சி பெரியசூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இந்த நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி டிச.14-ல் மனு அளித்திருந்த நிலையில், அப்பகுதியில் சில நாள்களுக்கு முன் வாடிவாசல் அமைக்கப்பட்டு, பரிசுப் பொருள்களும் தயாராகின.

இதற்கிடையே போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய்த் துறை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்த பிறகும் செவ்வாய்க்கிழமை வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால் போட்டி ஏற்பாட்டாளா்கள், ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருந்தபோதும் தொடா் மழையால் திட்டமிட்டபடி ஜன.15இல் போட்டி நடக்குமா என்பது சந்தேகமே; புதன்கிழமை மழை பெய்யாவிடில் கண்டிப்பாக போட்டி நடத்த வாய்ப்புள்ளது; இல்லாவிடில் வேறு தேதியில் போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றனா் ஏற்பாட்டாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.