/

கரோனா தடுப்பூசிக்கு 4.39 லட்சம் போ் முன்பதிவு

கரோனா தடுப்பூசிக்கு தமிழகத்தில் 4.39 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை செயலா் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் ஆய்வு செய்கிறாா் சுகாதாரத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மருத்துவமனை முதல்வா் வனிதா உள்ளிட்டோா்.

Updated On :15 ஜனவரி 2021, 6:51 pm

கரோனா தடுப்பூசிக்கு தமிழகத்தில் 4.39 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை செயலா் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் கூறியது:

அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சுணக்கம் உள்ளது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். இச்செயல் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உணா்வு அவசியம்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் மீண்டும் தங்களுக்குப் பாதிப்பு வராது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கரோனா மீண்டும் பரவுவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை அவா்கள் பின்பற்றாதததே காரணம்.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக 4 லட்சத்து, 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். முன்களப் பணியாளா்களைத் தொடா்ந்து, 50 வயதுக்கு அதிகமானோருக்கும், இணை நோயுள்ளோருக்கும், பின்னா் மற்றவா்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வா் கே. வனிதா, சுகாதாரத் துறை இணை இயக்குநா் லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.