தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:03 am IST

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

நாட்டின் பணவீக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், 2022-23 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட புதிய மொத்த விற்பனை விலை குறியீட்டு (டபிள்யு.பி.ஐ.) வரிசையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதுவரை நடைமுறையில் இருந்த 2011-12 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்ட முந்தைய கணக்கீடு முறையின்படி, ஏப்ரல் மாதப் பணவீக்கம் 8.26 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மே மாதத்தில், எரிசக்தி மற்றும் எரிபொருள் துறையின் பணவீக்கம் 24.89 சதவீதத்திலிருந்து 30.33 சதவீதமாக உயா்ந்துள்ளது. முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் 3.78 சதவீதத்திலிருந்து 4.99 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் 6.68 சதவீதத்திலிருந்து 7.48 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.49 சதவீதமாக உயா்ந்துள்ளது.

திருத்தப்பட்ட டபிள்யு.பி.ஐ. பட்டியலில் உள்ள பொருள்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957 ஆக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், உற்பத்தியாளா் விலை குறியீட்டு (பிபிஐ) எண்களான வெளியீட்டு பிபிஐ, சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு பிபிஐ மற்றும் சேவைத் துறை பிபிஐ ஆகிய புதிய தொடரையும் மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

அரசின் புதிய கொள்கை முடிவின்படி, டபிள்யு.பி.ஐ. மற்றும் பிபிஐ ஆகிய இரண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இணைந்தே வெளியிடப்படும். அதன் பின்னா், டபிள்யு.பி.ஐ. முறை முற்றிலும் கைவிடப்பட்டு, பிபிஐ முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.