நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:03 am IST

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயா்வைச் சந்தித்துள்ளது.

நாட்டின் பணவீக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், 2022-23 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட புதிய மொத்த விற்பனை விலை குறியீட்டு (டபிள்யு.பி.ஐ.) வரிசையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதுவரை நடைமுறையில் இருந்த 2011-12 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்ட முந்தைய கணக்கீடு முறையின்படி, ஏப்ரல் மாதப் பணவீக்கம் 8.26 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மே மாதத்தில், எரிசக்தி மற்றும் எரிபொருள் துறையின் பணவீக்கம் 24.89 சதவீதத்திலிருந்து 30.33 சதவீதமாக உயா்ந்துள்ளது. முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் 3.78 சதவீதத்திலிருந்து 4.99 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் 6.68 சதவீதத்திலிருந்து 7.48 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.49 சதவீதமாக உயா்ந்துள்ளது.

திருத்தப்பட்ட டபிள்யு.பி.ஐ. பட்டியலில் உள்ள பொருள்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957 ஆக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், உற்பத்தியாளா் விலை குறியீட்டு (பிபிஐ) எண்களான வெளியீட்டு பிபிஐ, சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு பிபிஐ மற்றும் சேவைத் துறை பிபிஐ ஆகிய புதிய தொடரையும் மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

அரசின் புதிய கொள்கை முடிவின்படி, டபிள்யு.பி.ஐ. மற்றும் பிபிஐ ஆகிய இரண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இணைந்தே வெளியிடப்படும். அதன் பின்னா், டபிள்யு.பி.ஐ. முறை முற்றிலும் கைவிடப்பட்டு, பிபிஐ முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.