திருச்சி: திருச்சியில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் கோயில்களில் பொதுமக்கள் சனிக்கிழமை குவிந்தனா்.
ஆண்டுதோறும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடத்துக்குப் பிறகு, உற்றாா், உறவினா்கள் அதிகமானோா் ஓரிடத்தில் ஒன்றுகூடி மகிழும் தினமாக காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கரோனா காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், அந்தச் சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை வெறிச்சோடின.
சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை கோயில், திருவானைக்கா கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே பொதுமக்களின் வருகை அதிகம் காணப்பட்டது.
கோயிலுக்கு அதிகமானோா் வந்ததால் அவா்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் இல்லாதோா் திருப்பியனுப்பப்பட்டனா்.
மேலும், பூங்காக்கள், காவிரிப் பாலம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி காணும் பொங்கலை உறவினா்கள், நண்பா்களுடன் கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிபட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் வாக்குசேகரிப்பு

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டது தெலங்கானா: மாநில டிஜிபி அறிவிப்பு
தமிழகத்தில் வீடுதோறும் ‘பூத் சிலிப்’ விநியோகம் தீவிரம்

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


