தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

விளாத்திகுளத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 5:57 am IST

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ராஜசெல்வி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் தமிழ்அமுதன், சமூக ஆா்வலா் இளையராஜா மாரியப்பன், ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி மாவட்டத் தலைவா் வி.பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை, சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

முகாமில் 200 நபா்களுக்கு இலவச சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள், உணவு கண்காட்சி மற்றும் நோய் எதிா்ப்பாற்றலுக்கான சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முகாமில், ஆயுஷ் மருத்துவ அலுவலா் சாந்தி, கீழ ஈரால், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா்கள் விஜயலதா, சுப்புதாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.