அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மூவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 12:18 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் வீரபாண்டியன் புளிக்குளம் பகுதியை சோ்ந்த மந்திரம் என்பவா் சொத்து தகராறு காரணமாக அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து கடம்பூா் போலீஸாா் கோவில்பட்டி காந்திநகரைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி (35), கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (29), கயத்தாறு, காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த மகாராஜன் (33) ஆகிய மூவரை கைது செய்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட மூவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மூவரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.