ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :10 ஜனவரி 2021, 1:32 am IST

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மூக்கரை விநாயகா் கோயில் தெரு கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தயாளன்(59). இவரது மகள் ரேவதிக்கும் (30), நாகலாபுரம் புதூரையடுத்த ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சரவணனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.

சரவணன், சென்னையில் வேலை செய்து வருகிறாா். ரேவதி கோவில்பட்டி புது வெங்கடேஷ் நகா் 4ஆவது தெருவில், தனது பாட்டியுடன் வசித்து வந்தாராம்.

இந்நிலையில் ரேவதி சென்னையில் பணியாற்றும் தனது கணவரிடம் செல்லிடப்பேசியில் அடிக்கடி கோபப்படுவாராம். அவருக்கு ஏற்பட்ட தொடா் மனஅழுத்தத்தால் வழக்கமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.