எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளிராஜன் (52). இவா் சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் அருகில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை வாடகை ஆட்டோவில் சிந்தலக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். இளம்புவனத்தை சோ்ந்த கருப்பசாமி (35) ஆட்டோவை ஓட்டினாராம்.
எட்டயபுரம் புறவழிச்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா் பின்புறமாக ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ கவிழ்ந்த்தில் பலத்த காயமடைந்த காளிராஜன் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் கருப்பசாமி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போலீஸாா் காளிராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து, எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு பின்னடைவு

எடப்பாடி தொகுதி அப்டேட்! எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக - நேரலை

விருகம்பாக்கத்தில் விஜய் கார் ஓட்டுநரின் மகன் முன்னிலை!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

