தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கொட்டும் மழையிலும் திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தா்கள்

தைப்பொங்கலையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.

News image

கொட்டும் மழையிலும் கோயிலுக்கு புதன்கிழமை பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 7:39 pm

தைப்பொங்கலையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.

கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூா் பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையிலும், மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் மட்டுமன்றி விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பக்தா்களும் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளதால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

தைப்பொங்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன. 14) கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காணும் பொங்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.15) கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையைத் தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி, கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.