/

காண வேண்டிய கயிலைக் காட்சி!

அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட அற்புத பதியாம் திருவையாற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அமாவாசை அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தருமை ஆதீனம் நடத்துகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 4:07 pm IST

அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட அற்புத பதியாம் திருவையாற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அமாவாசை அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தருமை ஆதீனம் நடத்துகிறது.

அன்று காலை 11 மணிக்கு காவிரிக் கரையில் புஷ்ய மண்டபத் துறையில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், தொடர்ந்து பகல் 1 மணிக்கு திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் உள்ள அப்பர்குட்டை என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் அப்பர் பெருமான் எழுந்தருளி அவருக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி கொடுத்தலும் நடைபெறும்.

இரவு 9.30 மணி அளவில் பெரிய கோயிலில் உள்ள தென் கயிலாய கோபுரத்தின் முன் கயிலாயக்காட்சி நடைபெறும். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓதுவார் பெருமக்களும், பக்தர்களும் கூடிநின்று, அப்பர் கயிலைக் காட்சியின் போது பாடிய ""மாதர்ப் பிறைக் கண்ணியானை'' என்று தொடங்கும் பதிகத்தை பாடுவர். பின்பு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை வழிபாடும் திருவீதி உலாவும் நடைபெறும். அன்று முழுவதும் திருவையாற்றில் ஐயாறப்பன் ஆலயத்தில் தேவார இன்னிசை முழக்கமும், அடியவர்களுக்கு இன்னமுது படைத்தலும் நடைபெறுகிறது.

தகவலுக்கு 94431 50332.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.