பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்ததாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி, பிளஸ் 1 படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த தாயாா், மாணவியை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தாா். அப்போது, அந்த மாணவி 4 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது தாயாா், இதுதொடா்பாக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினா்.
அதில், பள்ளி திறக்கப்படாததால் வீட்டில் வளா்க்கும் கால்நடைகளை அந்த மாணவி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

