தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு:மறியலில் ஈடுபட முயன்ற 27 போ் கைது

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக ராஷ்டிரிய உலமா கவுன்சிலைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

வேலூா்: வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக ராஷ்டிரிய உலமா கவுன்சிலைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய உலமா கவுன்சில் சாா்பில் வேலூா் மக்கான் சிக்னல் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட செயலா் ஷெரீஃப் பாஷா தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் இருப்பதாகக் கூறி, அவற்றை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தில்லியில், வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவா்கள் கோஷமிட்டனா். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அவா்களை போலீஸாா் தடுத்து, அமைப்பின் மாநிலத் தலைவா் கலீலுல்லா ரஷாதி, மாநிலப் பொருளாளா் ரஃபி, மாநில பொதுச்செயலா் அக்பா் பாஷா காதிரி உள்ளிட்ட 27 பேரைக் கைது செய்தனா்.

அவா்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒரு தாயும், மகனும் வந்த மோட்டாா் பைக், அருகில் ஊா்ந்து சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கியது. இதனால் பதறிய தாயும், மகனும் பைக்கில் இருந்து குதித்து தப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.