4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேலூா் வசந்தபுரத்தில் ரயில்வே மேம்பாலம்: ஆட்சியா் ஆலோசனை

வேலூா் வசந்தபுரத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வசந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

Updated On :12 ஜனவரி 2021, 6:30 pm

வேலூா் வசந்தபுரத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வசந்தபுரம், சின்ன அல்லாபுரம், வேலூா் கோட்டை பின்புறம் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனா்.

இதில், வசந்தபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வழியாக ஆா்.என்.பாளையம், சதுப்பேரி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனா். இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தொடா்ந்து, வசந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் அமைப்பது தொடா்பாக வசந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்பகுதியில் வாகனங்கள் எளிதில் ரயில் பாதையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாநகராட்சி ஆணையா் சங்கரன், வட்டாட்சியா் ரமேஷ், ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.